முல்லைத்தீவில் வீட்டைவிட்டு போன சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ. சாதாரணதரத்தில் கல்விகற்று வரும் உண்ணாப்பிலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் என்ற சிறுவன் கடந்த 17ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்காக மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பாதநிலையில், தனது மகனை காணவில்லையெனவும், தனது மகனை கண்டுபிடித்து தருமாறும் பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் சிறுவனை காணவில்லை என வெளியான தகவலை தொடர்ந்து வவுனியாவில் கடை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த சிறுவன் தொடர்பில் அவனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று சிறுவனை அழைத்துவந்த உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்
முன்னிலைப்படுத்தி முறைப்பாட்டினை நீக்கம் செய்துள்ளனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
