காடழிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, திம்பிலி பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கோம்பாவில் கிராம சேவையாளரால் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியிலுள்ள திம்பில் குளம் அமைந்துள்ள இடத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன், குளக்கரையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அண்மையில் தெரியவந்ததை தொடர்ந்து, கோம்பாவில் கிராம சேவையார் குறித்த பகுதியினை நேற்று பார்வையிட்ட போது அதில் கனரக இயந்திரங்கள் கொண்டு சுமார் 20 ஏக்கர் வரையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்பட்டுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கோம்பாவில் கிராம சேவையாளரால் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.