முல்லைத்தீவில் கைவிடப்பட்ட நிலையில் வெடிபொருட்கள்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில்
பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வெடிபொருட்கள் சில இனங்காணப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின் தகர்த்தழிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கின் சில பகுதிகளாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் யாழில் குப்பை எரிப்பதற்காக சென்ற பெண்ணொருவரும் பற்ற வைப்பதற்காக சேகரிக்கப்பட்ட குப்பையில் இருந்த வெடிபொருளொன்று வெடித்த சம்பவத்திற்கு இலக்காகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.