ஒட்டுச்சுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீள் ஆரம்பம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு(Photos)
முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீள் உருவாக்கம் செய்வது தொடர்பில் கைத்தொழில் அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுச் சுட்டான் ஓட்டு தொழிற்சாலைக்கு இன்றையதினம் (27.06.2023) விஜயமொன்றினை மேற்கொண்ட போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்றையதினம் 3 இயந்திரவியல் பொறியியலாளர்கள், 1 குடிசார் பொறியிலாளர், ஒட்டுச்சுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உட்பட நிபுணத்துவ குழுவுடன் அங்கு சென்று கலந்துரையாடியுள்ளார்.
அறிக்கை சமர்பிப்பு
இந்நிலையில் அரசாங்க கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படுகின்ற இதற்கான சாத்தியகூற்று அறிக்கை ஒன்றை வரைந்து கைத்தொழில் அமைச்சருடன் கலந்துரையாட இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசியலை தாண்டி எமது இளைஞர் யுவதிகளது வேலைவாய்ப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு
அதன் அடிப்படையில் இந்த பிரதேச மக்கள் இந்த ஓட்டு தொழிற்சாலை இயங்குவதன் மூலம் தமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றார்கள்.
பாரிய செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை மிகவும் எளிதாக இதனை இயங்க வைக்க முடியும் இதன் மூலம் வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்பிற்கும் பாரிய பங்களிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
