முல்லைத்தீவு கடற்படையினருக்கு படகு வெளியிணைப்பு இயந்திரங்கள் கையளிப்பு! (PHOTOS)
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்திற்கு வழங்கப்பட்ட படகு வெளிஇணைப்பு இயந்திரங்கள் இரண்டு மாவட்டஅரசாங்க அதிபரினால் கடற்படையினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
படகு வெளிஇணைப்பு இயந்திரங்கள் கடற்படையினருக்கு கையளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) நடைபெற்றுள்ளது
5 இலட்சம் பெறுமதியான படகு வெளிஇணைப்பு இயந்திரங்கள் இரண்டு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 71 கிலோமீற்றர் நீளம் கொண்ட கடற்பரை பிரதேசமும் தாள் நில பிரதேசங்களும் காணப்படுகின்றன.
கடல் மற்றும் தரை நீருடன் தொடர்புடைய அனர்த்தங்கள் நிகழும் பொழுது அதில் இருந்து மீட்பதற்கான செயற்பாட்டிற்காக இந்த இரண்டு இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது கடற்படையினரின் உதவியுடனேயே மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன குறிப்பாக மழைவெள்ளத்தின் போதும் கடற்படையினரின் உதவியுடன் படகுமூலம் மக்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக ஏற்படும் அனர்த்தத்திற்கு முன்னுரிமையளித்து இரண்டு படகு வெளி இணைப்பு இயந்திரங்கள் இரண்டும் கடற்படையினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவு உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் மற்றும் வட்டுவாகல் கடற்படை முகாமின் அதிகாரி ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.






