முல்லைத்தீவு மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டம் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் பொதுத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் காணிகளைக் கையளித்தல், நீண்ட கால மற்றும் குறுகிய காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான அனுமதி பெறல், காணி கச்சேரி மூலம் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கு அனுமதி வழங்குதல் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலக ரீதியாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண காணி உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
