முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலயத்தில் மெய்வல்லுனர் போட்டிகள்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட குமுழமுனை மகா வித்தியாலயத்தில் வருடாந்த மெய்வல்லுனர் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டிகள் நேற்றுமுன்தினம் (07.03.2024) பாடசாலை அதிபர் வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
போட்டி நிகழ்சிகள்
இதன்போது ஆண்களுக்கான வீதியோட்டமானது மூன்றாம் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமாகியதுடன் பெண்களுக்கான போட்டி நிகழ்வானது அளம்பில் முருகன் கோயில் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை உதயரதன் துளசிகன், இரண்டாமிடத்தினை ஜெயக்குமார் கிசாளன் மற்றும் மூன்றாமிடத்தினை கிருபாகரன் பிரவீன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
அத்துடன் பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை யூட்நிரூபன் தேனுயா, இரண்டாமிடத்தினை அற்புதராஜா வினோதா மற்றும் மூன்றாமிடத்தினை வியஜகுமார் புகழினி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதி மிக்க வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், அனுசரனையாளரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.