தப்ப முடியாத ஆபத்தில் பிள்ளையான்! தோண்டப்படும் பிரேமினி விவகாரம் - களத்தில் டேவிட் பரராஜசிங்கம்
வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவருவதாகவும் கூறப்படும் விடயங்கள் இன்றைய செய்திகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட இடம் இதுவென குறிப்பிடப்படுகிறது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் போது கடத்தப்பட்டு, வெலிகந்தை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர், சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பாரிய திருப்பங்களை கொண்டமைந்துள்ளன.
தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,