கனடாவுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.. மீண்டும் வலுக்கும் வர்த்தக போர்!
கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
குறித்த பதிவில், ”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக இருப்பதைத் தவிர, எங்கள் விவசாயிகளிடம் பல ஆண்டுகளாக பால் பொருட்கள் மீது 400 வீத வரி விதித்து வந்துள்ளது.
வரி விதிப்பு
இப்போது அவர்கள் எங்கள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது எங்கள் நாட்டின் மீது நேரடியானதும் மற்றும் வெளிப்படையானதுமான தாக்குதலாகும்.
தெளிவாக, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை போல செயல்படுகிறார்கள்; அந்த அமைப்பும் இதுபோலவே செய்துள்ளது, மேலும் அதையொரு விவாதமாக நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
இந்த மிகைப்படுத்தப்பட்ட வரியை அடிப்படையாகக் கொண்டு, கனடாவுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்துகிறோம்.
வருகிற ஏழு நாட்களுக்குள் கனடா, அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய வேண்டுமானால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதனை அறிவிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |