முல்லைத்தீவு - ஐயன்கன் குளம் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு(Mullaitivu) ஐயன்கன் குளம் பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேசகமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(01.04.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள ஐயன்கன் குளத்தின் கீழ் கடந்த 2023 சிறுபோக செய்கையின் போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக செய்கைக்கான தண்ட அறவீட்டை நிறுத்துமாறும் அல்லது கால அவகாசம் வழங்குமாறு கோரியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை அடங்கிய மனு
தொடர்ந்து விவசாயிகள் தமது கோரிக்கை அடங்கிய மனுவை துணுக்காய் கம நல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.வசந்தனிடம் மக்கள் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கை அடங்கிய மனுவை துணுக்காய் பிரதேச செயலாளர் இ.ரமேஷிடம் கையளித்திருதார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam