முல்லைத்தீவு கடற்றொழில் அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் கடற்றொழில் அபிவிருத்தி குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக இன்றையதினம் (26.06.2025) மாலை 3.45 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூன் 25) மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், கடற்றொழிலுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தது.
குறித்த கூட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர்.
அத்தோடு உள்நாட்டு சட்டவிரோதச் செயல்கள் உரிமம் இன்றி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் கடற்றொழில் முறைகள் போன்ற அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
லைட் கோர்ஸ் கடற்றொழில் முறைகளால் சிறிய மீன் குஞ்சுகள் கூட அழிக்கப்படுவதால், எதிர்கால வளங்களுக்கு சேதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதனையடுத்து இதுவரை இடம்பெற்ற அனைத்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே வலியுறுத்தியிருந்தார்.
அதனையடுத்தே நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இன்றையதினம் கடற்றொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கொக்குளாய் பகுதியில் முகாம் அமைத்து படகுகள் சோதனை செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தாெழில் சம்மேளத்தினர் ஊடகசந்திப்பினை நிகழ்த்தி கருத்து தெரிவித்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன சம்மேளனத்தின் உபதலைவர் அருள்நாதன்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தணிகாசலம், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பிரதாஸ், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட தலைவர் நடனலிங்கம், கள்ளப்பாடு சித்திவிநாயகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் கள்ளப்பாடு வடக்கு ஆதி வைரவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெய்வரங்கன் போன்றவர்கள் பங்கெடுத்து கருத்து தெரிவித்தார்கள்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
