முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 25 பேர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 25 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மருத்துவமனையில் உடலங்கள் தேங்கப்படவில்லை என்றும், அனைத்து உடலங்களும் கட்டம் கட்டமாக வவுனியா, பொலனறுவை போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதுடன், இன்னும் நான்கு உடலங்கள் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவிற்காகக் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மக்கள் விழிப்பாகவும்,அவதானத்துடனும் செயற்படுமாறும் நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக மருத்துவமனையினை நாடி இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
