ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்தும் செயற்பாட்டை கண்டிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி
ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த ஏதிலிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள்
அத்துடன், துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு அவர்களை அனுப்புவது, சர்வதேச கொள்கைகளை மீறும் செயலாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றப்படும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேண்டுகோள்
உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்த, இது இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும் எடுத்துரைத்துள்ளார்.
2024 டிசம்பர் 19 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 103 ரோஹிங்கியா ஏதிலிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri