இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: போராட்டம் நடத்தப்படும்! முகமட் ஆலம் எச்சரிக்கை

Indian fishermen Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fisherman
By Theepan Feb 19, 2026 06:35 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ்நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என்றும் இந்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா அரங்கில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நாடகங்களால் அநுர அரசு தடம் புரளாது : நளிந்த பகிரங்கம்

அரசியல் நாடகங்களால் அநுர அரசு தடம் புரளாது : நளிந்த பகிரங்கம்

விதிமுறைகளை மீறும் கடற்றொழிலாளர்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பெரும் பேசுபொருளாக உள்ள கரைவலை தொழில் நடைமுறைகள் தொடர்பாக, குறிப்பாக தமிழகம் காரைக்காலில் இருந்து எல்லைத் தாண்டி வருகின்ற கடற்றொழிலாளர்கள் காரணமாக நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றோம். அதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களும் இணைந்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: போராட்டம் நடத்தப்படும்! முகமட் ஆலம் எச்சரிக்கை | Muhammad Alam Warning

இதேவேளை, ஜனாதிபதி செயலகம் முன் கரைவலை தொழிலை அனுமதிக்குமாறு கோரி சிலர் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அப்போது, குறித்த தரப்பினரை ஜனாதிபதி சந்தித்தபோது, நாட்டிலுள்ள சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

மேலும், சட்டத்தை மீறி அனுமதிக்கப்படாத ஒரு தொழிலை செய்ய அனுமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்களுக்கு விளக்கினார். அத்துடன், தொழில் விதிமுறைகளை மீறும் எந்த தொழிலும் அரசால் தடுக்கப்பட்டிருந்தால், அந்த தொழில்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என நாங்களும் வலியுறுத்தினோம்.

ஏனையவர்களுக்கு பாதகம் ஏற்படும் என்பதை அறிந்தே கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசு அதைச் சட்டமாக்கியுள்ளது. ஒருசிலரின் தேவைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்பதற்காகவும் எந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்முறையையும் ஏற்க நாங்கள் தயாரில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: போராட்டம் நடத்தப்படும்! முகமட் ஆலம் எச்சரிக்கை | Muhammad Alam Warning

அதேவேளை, சட்டரீதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது தடங்கல்கள் குறித்து அவர்களுக்காக எந்த நேரத்திலும் குரல் கொடுக்க நாம் தயங்கமாட்டோம். அடுத்தவர்களுக்கோ அல்லது கடல் வளங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் தொழில்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அநுரவின் பயணத்தில் இதற்கும் வாய்ப்புள்ளது..

கரைவலை தொழில் அரசால் எவ்வாறு நிறுத்தப்பட்டதோ, அதேபோல் ஏனைய பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்களும் நிறுத்தப்பட வேண்டும்.

உங்கள் பணம் காத்திருக்கிறது: இலங்கையில் 16800 பேருக்கு சென்றுள்ள செய்தி

உங்கள் பணம் காத்திருக்கிறது: இலங்கையில் 16800 பேருக்கு சென்றுள்ள செய்தி

இதனிடையே, காரைக்கால் கடற்றொழிலாளர்களின் இரண்டு படகுகள் அண்மையில் 25 பேருடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களின் தொடர் வருகை யாழ்ப்பாணத்திலிருந்து தற்போது மன்னாரின் தெற்குக் கடல் பகுதிகள், குறிப்பாக புத்தளம் வரை அதிகரித்துள்ளது.

இது எமது நாட்டின் கடற்றொழிலாளர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த விடயத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகின்றது. அதேநேரம், கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் தொடர்பான விடயங்களைத் தவிர ஏனைய அனைத்திலும் தீவிரமாக செயல்படுகிறார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: போராட்டம் நடத்தப்படும்! முகமட் ஆலம் எச்சரிக்கை | Muhammad Alam Warning

ஆனால் எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக டிட்வா புயலுக்குப் பிறகு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இருந்தபோதிலும், அமைச்சர் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

கடற்றொழில் அமைச்சர் அசட்டுத்தனமாக தொடர்ந்து செயல்பட்டால், அவருக்கு எதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார். அவர் வேறு ஒரு காரணத்திற்காகச் சென்றிருந்தாலும், எல்லைத் தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை குறித்து ஏதாவது வகையில் கலந்துரையாட வாய்ப்பு உள்ளது.

எனவே, சட்டவிரோதமாக அரசால் தடுக்கப்படும் எந்த தொழில்முறையாக இருந்தாலும் அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என வலியுறுத்தியுள்ளார்.  

நரேந்திர மோடியின் விசேட இரவு விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுர

நரேந்திர மோடியின் விசேட இரவு விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுர

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US