மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலைய நிர்மாண செலவு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் செயற்பாடுகளின் போது, 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திறம்பட பயன்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகம் அதன் 2023 ஆண்டு அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
2023இல் குறித்த விமான நிலையம் 288 மில்லியன் ரூபாய் இயக்க வருமானத்துக்கு பதிலாக 2,412.9 மில்லியன் ரூபாய் இயக்க செலவை ஏற்படுத்தியதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிகர இழப்பு
2018 முதல் 2023 வரை வரிக்குப் பின் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு 38,489 மில்லியனாக இருந்தது.

எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பயணிகள் திறன் ஒரு மில்லியன் என்றாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கையாளப்பட்ட மொத்த பயணிகளின் எண்ணிக்கை 190,750 மட்டுமே என்று பதிவாகியுள்ளது.
அதேவேளை, விமான நிலைய கட்டுமானத்திற்கு நிதியளிப்பதற்காக ஆரம்பத்தில் பெறப்பட்ட 190 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனுக்கான வட்டியாக, நிறுவனம் ஆண்டுதோறும் 1,590 மில்லியன் ரூபாயை செலுத்தி வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri