ஊழியர்களுக்கான பதவிகளை குடும்பத்திற்குள் பகிர்ந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 வீதமானவர்கள், தமது ஊழியர்களாக மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களை நியமித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாக 6 பேரை நியமிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இவர்களில் அதிகாரி மற்றும் ஊழியருக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஊழியர்கள் குழுவில் தனிப்பட்ட செயலாளர், ஆய்வு அதிகாரி, இரண்டு சாரதிகள், எழுதுவினைஞர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தமது தனிப்பட்ட செயலாளர்களாக தமது மனைவிகளையே நியமித்துள்ளனர். தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு கிடைக்கும் பணத்தை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்வதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனைக்கு அமைய அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழ் உள்ள நாடாளுமன்ற விவகார பிரிவே இந்த நியமனங்களை வழங்குகிறது.
இதனிடையே அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு ஒரு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 12 பேரை நியமித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam