உத்தியோகபூர்வ வீடுகளை மறுத்த எம்.பிக்கள் சொகுசு வீட்டு வளாகத்தில்!
அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ வீடுகள் வேண்டாம் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பம்பலப்பிட்டிக்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் தங்கியிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு வீடுகளை கைவிட்ட பன்னிரண்டு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தற்போது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த வீட்டு வளாகம் உயர் அரசு அதிகாரிகளின் வசிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மிகக் குறைந்த விலை
ஏதேனும் சந்தர்ப்பத்தில், இளைய அமைச்சர்களும் அங்கு தங்கியிருப்பதாகவும் குறித்த ஊடக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மாதத்திற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வாடகைக்கு விடப்பட வேண்டிய ஒரு வீட்டை, மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்துள்ளதாகவும் ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 10 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
