இலங்கை விவகாரத்தில் இந்திய விமானப்படையின் நகர்வு
இன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையை ஒட்டியதான ஒரு கொதிநிலை தோன்றியிருக்கின்றது. அது யாவரும் அறிந்ததே என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த வருட இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்தமை, அதேவேளை சீனாவினுடைய இராணுவ உயர் மட்ட பிரமுகர்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை, இந்திய பிரதமருடைய பயணம், இந்திய வெளிவிவகார அமைச்சருடைய பயணம் என்பன அமைந்திருந்தன.
இவைகள் இந்திய பசுபிக் பிராந்தியம் என்று சொல்லப்படுகின்ற பகுதியில் ஏற்பட்டு வருகின்ற கொதிநிலையை வெளிக்காட்டியிருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,