வனஜீவராசிகள் திணைக்கள வலயப்பொறுப்பதிகாரியை தீண்டிய மலைப்பாம்பு (Photos)
புத்தளம் பகுதியில் நேற்றிரவு தோட்டமொன்றிற்குள் உட்புகுந்த மலைப்பாம்பை அவதானித்த அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பை இன்று சரணாலயத்தில் விடுவிப்பதற்காக கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பிடிப்பதற்கு முற்பட்ட வேளை புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள வலயப்பொறுப்பதிகாரியை மலைப்பாம்பு தீண்டியுள்ளது.
இதன்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,மலைப்பாம்பை தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மலைப்பாம்பு சுமார் 9 அடி நீளமுடையதாக காணப்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாம்புகளை பிடிப்பதற்கான உரிய உபகரணங்கள் தம்மிடம் இல்லாமையினாலேயே
மலைப்பாம்பு தீண்டுதலுக்கு உள்ளாகியதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.




சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam