வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையில் மட்டும் 223,423 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
வாகன இறக்குமதி
இந்த அனைத்து வகைகளையும் உள்ளடக்கிய 55,338 கார்கள், 13,850 முச்சக்கர வண்டிகள் மற்றும் 35,268 மின்சார வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம், இந்த ஆண்டுக்கான மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்பட்ட வருவாய் இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான இலக்காக துறைக்கு 16 பில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அந்த இலக்கைத் தாண்டி நவம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி 17.8 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆண்டிற்கு திறைசேரி துறைக்கு ரூ. 18 பில்லியன் வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், மோட்டார் போக்குவரத்துத் துறை அந்த இலக்கை அடையும் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam