முல்லைத்தீவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள்: இருவேறு பகுதிகளில் விபத்து
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(19.10.2024) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பரந்தன் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதி நோக்கி வேகமாக பயணித்த சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து இவ்வாறு நகைக்கடை ஒன்றுக்கள் புகுந்துகொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது நகைக்கடையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சிறியரக பாரா ஊர்தி
மேலும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒட்டுசுட்டான் முள்ளியவளை வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த சிறியரக பாரா ஊர்த்தி ஒன்று வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முள்ளியவளையில் உள்ள வணிக நிலையம் ஒன்றிற்கு வவுனியாவில் இருந்துபொருட்களை ஏற்றி இறக்கும் சிறியரக பார ஊர்த்தியே இந்த விபத்தினை சந்தித்துள்ளது.
வீதியினை விட்டு விலகி அருகில் உள்ள சிறிய மரம் ஒன்றுடன் மேதியதில் வாகனம் சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் அதில் இருந்தவர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிவிசாரணையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam