திருகோணமலை பகுதியில் விபத்து: மாணவி ஒருவர் படுகாயம்
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற மாணவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிளின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் இவர் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் எனவும் தெரிய வந்துள்ளது.
தற்போது விபத்துடன் தொடர்புடைய இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.