வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் குண்டானது நேற்று(10.09.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் வெடி பொருளை பார்வையிட்டதுடன், அது மோட்டார் குண்டு என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
