சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைதான விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், தனது சகோதரரின் கைது செய்தி தமக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், "சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்" என்றும், இந்த விசாரணைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் தாராளமாக வழங்குவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஈரானுக்கு கிடைத்த கெட்ட செய்தி! அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது அமெரிக்கா
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர், பொதுப் பதவியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 66 வயதான அவர் நோர்போக்கில் (Norfolk) வைத்து கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரூ தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் வர்த்தகத் தூதுவராக பணியாற்றிய காலத்தில் (2001-2011), பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாக எழுந்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆண்ட்ரூவின் தற்போதைய மற்றும் முன்னாள் வசிப்பிடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஆண்ட்ரூவின் தொடர்புகள் குறித்து புதிய ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்தே, இந்த "பொதுப் பதவி முறைகேடு" தொடர்பான முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கை குறித்து எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்ணான வர்ஜீனியா ஜிஃப்ரேவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை" என்பதற்கு இது ஒரு சான்று என அவர்கள் கூறியுள்ளனர். ஆண்ட்ரூ நீண்டகாலமாகத் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
வர்த்தகத் தூதுவராக இருந்தபோது ஆசிய நாடுகளுக்கான பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri