பதுளையில் தாயும் மகளும் கொலை
பதுளை கெனல்ஜீன் தோட்டத்தின் ஹிரங்குருகம பிரதேசத்தில் பெண்ணும் அவரது மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே வீட்டில் வசித்த பெண்கள் மீது தாக்குதல்

கொல்லப்பட்டவர்களான பெண்ணும் அவரது மகளும் தோட்டத்தில் உள்ள வீட்டுத் தொகுதியில் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 83 வயதான பெண்ணும் 55 வயதான அவரது மகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்துள்ள 62 வயதான 83 வயதான பெண்ணின் மற்றுமொரு மகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri