தாயும் மகளும் வெட்டிக்கொலை - அநுராதபுரத்தில் கொடூரம்
வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அநுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு
அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
