யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Dec 10, 2024 05:20 AM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - வட்டுக்கோட்டை அராலி பகுதியில் தாயையும் 13 வயது மகனையும், கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கணவனை பிரிந்த தாய் ஒருவரும் மகனும் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், பளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபருக்கும் அந்த தாய்க்கும் இடையே  தவறான நட்பு ஏற்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம்

நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம்

மனநலக்குறைவு

இதனை தொடர்ந்து,  அந்த பெண்ணின் வீட்டிலேயே சந்தேகநபர் வசிக்க ஆரம்பித்துள்ளதுடன் சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி குறித்த பெண் மீதும், மகன் மீதும் தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது | Mother And 13 Year Old Boy Were Attacked In Jaffna

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர், தன்னுடைய தாக்குதல் காரணமாகவே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவேளை, அவருடைய மகன் மீதும்  தாக்குதல் நடத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸில் முறைப்பாடு 

இந்நிலையில் குறித்த சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவேளை, அந்த சிறுவனை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது | Mother And 13 Year Old Boy Were Attacked In Jaffna

இதன்போது, அந்த சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும், சந்தேகநபரை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில் பளை பகுதியில் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் மீண்டும் நேற்றையதினம் அராலி பகுதிக்கு வந்திருந்தவேளை வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்  அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து கொள்ளை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

பெண்களிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து கொள்ளை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW        

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US