இளம் தாயொருவர் பாம்பு தீண்டியமையால் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் தாயொருவர் பாம்பு தீண்டியதில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(16) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவரையே பாம்பு தீண்டியுள்ளது.
பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினுள் துப்பரவு பணிகளைச் செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளது.
என்ன பாம்பு தீண்டியது என்பது சரியாகத் தெரியாது எனவும் கால்கள் வீங்கி
விட்டதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri