இறுதி யுத்தம் கண்ட நடமாடும் சாட்சியங்கள்! (Live)
13 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற ஒரு காலப் பகுதியில் தான் தாயகம் முழுதும் மரண ஓலமும், சதையும் இரத்தமுமாக மக்கள் கொடூர யுத்தத்தின் இறுதிப் பிடிக்குள் சிக்குண்டிருந்தனர்.
அந்த துயரத்தினை நினைவுகூரும் வகையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
அன்று நடந்த அந்த கொடூரத்தின் விளைவாக, இன்று வரை தமது உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, சொந்த வாழ்க்கையை தொலைத்து நடமாடும் சாட்சியங்களாக பலர் எம்முன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆண்டுகள் பல கடந்து வந்தாலும், அன்றைய வேதனை இன்று வரையில் சிறிதும் ஆறாமல் துயர் தருவதாகவே இருக்கின்றது.
அவ்வாறு துயர்கண்ட பலர் தாம் அடைந்த வேதனைகளை, தமது அனுபவங்களை, பாதிப்புக்களை, தம் உணர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த துயரக் கதைகள் இதோ,