பனிப்போர்கால பாதுகாப்பு உறுதிமொழிக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ள ரஷ்யா - வடகொரியா
ஒருநாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு உடனடி இராணுவ உதவியை உடனடியாக வழங்குவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் வடகொரியாவும் கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வடகொரிய விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ரஷ்யா - வடகொரியா இடையேயான பலவருடகாலமகா கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இதுவே முன்னணி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பனிப்போர்கால பாதுகாப்பு
1961ஆம் ஆண்டு பனிப்போர்காலத்தின் பாதுகாப்பு உறுதிமொழிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உடன்படிக்கை மூலம் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள ஒரு நாட்டுடன் வடகொரிய தமது உறவுகளை வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |