ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி! செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக நேற்றைய தினம் மாலபே - பிட்டுகல பகுதியில் உள்ள ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரிடமே நேற்றைய தினம் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,