கோவிட் தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டால் என்ன நடக்கும்? முக்கிய செய்திகளின் தொகுப்பு
அஸ்ட்ரா செனெகா, பைசர் நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்தும் பெரியவர்கள், லேசானது முதல் மிதமானது வரையிலான பின்விளைவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்போது நடுக்கம் குளிர், தலைவலி, தசைவலி போன்ற பின்விளைவுகள் அதிகமான அளவில் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தப் பின்விளைவுகள் குறுகியகாலத்துக்கே நீடிப்பதாகவும், வேறு பெரிய ஆபத்து ஏதும் இல்லை எனவும் ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமம் நடத்திய ஆய்வில் அந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,