நாட்டை முடக்குங்கள் - ராஜபக்ச அரசுக்கு 24 மணிநேர காலக்கெடு! செய்திகளின் தொகுப்பு
தீவிரமடைந்துவரும் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் 24 மணிநேரத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்காது விட்டால் இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவைப் போன்று மாறிவிடும் என எச்சரித்துள்ளார்.
கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,