கொழும்பு நகர வான் பரப்பில் நோட்டமிடும் ட்ரோன் - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு நகரின் வான் பகுதியில் நேற்று முதல் கண்காணிப்பிற்காக ட்ரோன் கமராக்களை ஈடுபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு நகரில் ஏற்படுகின்ற வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியைக் கண்டறிந்து மாற்று நடவடிக்கையை எடுக்கவே பொலிஸார் இந்த முயற்சியை நேற்று ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த முயற்சிக்கு விசேட அதிரடிப்படையினரது உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,