ரஷ்ய படைகள் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள்! உக்ரைன் நேரடி ரிப்போர்ட்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 49 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில்,ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யப் படைகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நடந்த படுகொலைகள் குறித்தும் உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ரஷ்யப் படைகளால் 6,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,பொதுமக்களை படுகொலை செய்தல், பெண்கள் பலாத்காரம், குழந்தைகளை கொல்லுதல் போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் 6,036 போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
