வடமாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 50ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு
வடமாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 50ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாலர்கள் 6 வயது யானை ஒன்று இறந்தமை தொடர்பில் வைத்திய அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காடு அழிப்பு, மரம் வெட்டுதல், கருங்கல் அகழ்தல், கிரவல் அகழ்தல், மணல் அகழ்தல் என்பன காரணமாக காடுகள் அழிவடைந்து வருகின்றன.
இதன் காரணமாக காட்டு விலங்குகள் வெளியில் வருகின்றன.
வடமாகாணத்தில் 5 வருடத்தில் 50 இற்கு மேற்பட்ட யானைகள் வெங்காய வெடி காரணமாக இறந்துள்ளன.
வெங்காய வெடி காரணமாக பாதிக்கப்பட்ட யானைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கியுள்ளோம். மனிதர்கள் சிலர் வேட்டைக்காக
வைக்கும் வெங்காய வெடி காரணமாகவே பல யானைகள் இறந்துள்ளன எனத் தெரிவித்தார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri