வீடுகளில் தங்கியுள்ள 4,000க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளிகள் - வெளியாகியுள்ள தகவல்
நாடு முழுவதும் உள்ள சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையால் 4,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளிகள் இன்னும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்; தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 17,795 கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், 13,043 கோவிட் தொற்றாளிகள் மட்டுமே அரசாங்க நிலையங்களில் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4,752 கோவிட் தொற்றாளிகள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படவில்லை. இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை மொத்தம் 1,895 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில், கொழும்பு மாவட்டத்தில் 326 பேரும்;களுத்துறை மாவட்டத்தில் 309
பேரும், கம்பஹா மாவட்டங்களில் 279 பேரும் நோயாளிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.