கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்க்கப்பட்ட மேலும் சில எலும்புக்கூடுகள்: இன்று விசேட சோதனை
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு நேற்றும் (23.11.2023) மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகளில் மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.
விசேட ஸ்கான் இயந்திரம்
இவற்றுடன் துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்கத் தகடுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri