ரணிலுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
மக்களின் வாக்கு பலம்
இந்த நிலையில், மக்களின் வாக்குப் பலம் கொண்ட மேலம் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பிரசார மேடையில் ஏறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனினும்,முன்னாள் அமைச்சர் மனுஷவின் இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
