மொரவெவ பகுதியில் கடையொன்று தீக்கிரை
திருகோணமலை-மொரவெவ எட்டாம் வாய்க்கால் பகுதியில் சில்லறை கடையொன்று இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து கடைக்கு தீ வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சில்லறை கடையின் அனைத்து பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனாலும் மதுபோதையில் கடைக்கு தீ வைத்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடைக்கு தீ வைக்கப்பட்டமையினால் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.