மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Investigation Gun Shooting
By Dhayani Apr 24, 2024 02:47 PM GMT
Report

மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (23) அதிகாலை பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்திருந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி


மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Moragahahena Shooting Investigation

உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இதன்போது உயிரிழந்தவர்கள் பொலிஸாரை நோக்கி சுட்டதாக கூறப்படும் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மத்தேகொடவைச் சேர்ந்த இமேஷ் தனுஷ்க தர்ஷன் (வயது 36) மற்றும் தனமல்வில பகுதியைச் சேர்ந்த சூரஜ் பிரபோத ஆதிஹெட்டி (42) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் ஜீப் வண்டியை முச்சக்கரவண்டிக்கு அருகில் நிறுத்திய போது முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ​முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Moragahahena Shooting Investigation

பதிவு செய்யப்பட்ட குற்றவாளி 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 36 வயதுடைய தனுஷ்க தர்ஷன எனவும், இவருக்கு கஹதுடுவ மற்றும் மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2010ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் வீடுகள் உடைக்கப்பட்டு சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக வழக்குகள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்பதுடன், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹெரோயின் மற்றும் கஞ்சாவை வைத்திருந்த மற்றும் கடத்தியதற்காக மிரிஹான, மத்தேகொட மற்றும் மொரகஹஹேன பொலிஸ் நிலையங்களில் இவரை கைது செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் பண்டாரநாயக்கபுர மற்றும் மத்தேகொட பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 2017ஆம் ஆண்டு முதல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை


மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Moragahahena Shooting Investigation

பொலிஸார் விசாரணை

பிலியந்தலை, தலங்கம மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவை வைத்திருப்பதற்காக 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி கஹதுடுவ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்

அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US