வாடகை அறையொன்றுக்கு பெண்ணுடன் வந்த நபர் செய்த செயல்
இங்கிரிய, போதினாகல பிரதேசத்தில் வாடகை அறையொன்றுக்கு பெண்ணுடன் வந்த நபர், பெண்ணின் கழுத்தை அறுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அதேவேளை அந்த நபரும் தனது கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறவில் ஏற்பட்ட முரண்பாடு
48 வயதான ஆண் பிலியந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 43 வயதான பெண்ணும் இங்கிரியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பொருவடந்த, பனங்கலவத்தை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
தகாத உறவில் ஏற்பட்ட முரண்பாடே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.