அநுரவின் கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கையெழுத்து..
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கடன்களை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த நாட்டிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக, கடன் பெறவில்லை.
மேலும், புதிதாக பணம் அச்சிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளிலும் உண்மையில்லை. பணத்தை புதிதாக அச்சிடுவதென்றால் ஜனாதிபதியின் கையெழுத்து அவசியம்.
எனினும், இதுவரை ஜனாதிபதியின் கையெழுத்துடன் எந்த நாணயமும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
