அநுரவின் கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கையெழுத்து..
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கடன்களை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த நாட்டிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக, கடன் பெறவில்லை.
மேலும், புதிதாக பணம் அச்சிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளிலும் உண்மையில்லை. பணத்தை புதிதாக அச்சிடுவதென்றால் ஜனாதிபதியின் கையெழுத்து அவசியம்.

எனினும், இதுவரை ஜனாதிபதியின் கையெழுத்துடன் எந்த நாணயமும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri