அநுரவின் கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கையெழுத்து..
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கடன்களை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த நாட்டிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக, கடன் பெறவில்லை.
மேலும், புதிதாக பணம் அச்சிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளிலும் உண்மையில்லை. பணத்தை புதிதாக அச்சிடுவதென்றால் ஜனாதிபதியின் கையெழுத்து அவசியம்.

எனினும், இதுவரை ஜனாதிபதியின் கையெழுத்துடன் எந்த நாணயமும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam