அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பிய இளைஞர்கள் குழு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை அமைச்சர் பிரசன்ன ரணவீர பெற்றுக்கொள்ளும் வகையில், பண அஞ்சல் முறையின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு இன்று (18) பணம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்ம அறக்கட்டளையின் ஸ்தாபகரும், தலைவருமான சமன் பிரியந்த விஜேவிகம உள்ளிட்ட இளைஞர்கள் குழுவினரால் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 14 ஆம் திகதி காலை தனது மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போது சேவை வழங்கும் போர்ட்டருக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என விமான நிலையத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்த பின்னணியில், போர்ட்டருக்கு 700 ரூபாயை இராஜாங்க அமைச்சர் வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது, போர்ட்டரை இராஜாங்க அமைச்சர் தாக்கிய காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
