ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய பணமோசடி! பயணிகளுக்கு எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் வாட்ஸ் அப் இலக்கமென புதிய இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி மூன்று போலி இணையதளங்கள் மூலம் 'SriLankan.apk' என்ற மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யத்தூண்டுவதன் வழியாகவே இந்த மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தல்
இந்த செயலியானது ஒரு அபாயகரமான 'பேங்கிங் ட்ரோஜன்' மென்பொருள் என்றும், இதனை நிறுவுவதன் மூலம் கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அனுமதியை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்வதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதன் மூலம் தனிப்பட்ட இரகசியத் தரவுகள் திருடப்படுவதுடன், ஒரு பணப்பரிமாற்றத்தைச் செய்ய வைப்பதன் ஊடாக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல், வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் உறுதிப்படுத்தல் தரவுகளைப் பெற்று, சட்டவிரோதமாக வங்கி கணக்குகளுக்குள் நுழைந்து பணமோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மோசடிக்காக பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்கள்
இந்த மோசடிக்காக 077 45 58 361, 011 77 71 979, 074 11 42 208, 077 57 91 209 மற்றும் 074 32 68 200 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam