புறக்கோட்டையில் பணமாற்று முகவர் கைது: கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் - செய்திகளின் தொகுப்பு (Video)
புறக்கோட்டையில் பணமாற்று முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கியின் விதிமுறைகளை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தி செல்லப்பட்ட முகவர் நிறுவனமொன்று சுற்றிவளைக்கப்பட்ட போது இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பிரதேசத்தில் உண்டியல் முறை மூலம் பணத்தை மாற்றும் நபர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,