திறைசேரியில் இருந்து பணத்தை வழங்க முடியாது! நிதி இராஜாங்க அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
எதிர்காலத்தில் எழும் சவாலான பொருளாதார நிலைமைகளைத் தாங்கும் வகையில் அரச வணிகங்கள் மாற வேண்டும். அதன்படி, பல வழிகளில் அரச வணிகங்களை மறுசீரமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதை நாங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அதன்படி, அமைச்சரவை மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நிலைமைகளைத் தாங்கும் வகையில் அரச வணிகங்கள் மாற வேண்டும்

இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் தனி பிரிவு நிறுவப்பட்டுள்ளது. அந்த பிரிவின் அதிகாரிகள் தற்போது மற்ற அரசு நிறுவனங்களுடன் மிகவும் பொருத்தமான மறுசீரமைப்பு முறை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
எனவே நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் அரச வணிகங்களை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணத்தை வழங்க முடியாது.
இரண்டாவது விடயம், எதிர்காலத்தில் எழும் சவாலான பொருளாதார நிலைமைகளைத் தாங்கும் வகையில் அரச வணிகங்கள் மாற வேண்டும்.
அதன்படி, பல வழிகளில் அரச வணிகங்களை மறுசீரமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். அந்த அனைத்து மறுசீரமைப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam