மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரிக்கை!
இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்திடம் கோரியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தல்
மேலும் மாகாணசபைத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரியதா என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களில் மூன்று தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam