மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரிக்கை!
இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்திடம் கோரியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தல்
மேலும் மாகாணசபைத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரியதா என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களில் மூன்று தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan