மோடி வழங்கிய உறுதிமொழி - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யால பருவத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்தவுடன் 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து மகா பருவத்திற்கான நன்மைகளை வழங்க முடியும் என கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பணிப்புரை
மொரண, மஹகல்கமுவ போஷித எல, மஹகோன வெவ, விலகண்டிய வெவ மற்றும் கொதிகமுவ வெவ ஆகிய திட்டங்கள் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கடந்த மூன்று நாட்களில் மொத்த மின் உற்பத்தியில் 80 விகித நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் தேசிய மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
மிதக்கும் சோலார் பேனல் திட்டங்களை மேம்படுத்தவும் கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் நன்மைகளை அதிகரிக்கவும் நுகர்வோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இம்மாதப் பருவத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் கீழுள்ள 50 விகித நீர்ப்பாசன நிலங்களில் ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் மற்றும் அமைச்சின் லைன் ஏஜென்சிகளின் அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri